Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் திருவிழா

நவம்பர் 03, 2023 11:32

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஸ்ரீ நித்ய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில் உள்ளது இக்கோவிலில் ஒவ்வொரு முக்கிய விசேஷ தினங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை போன்ற தினங்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் அபிஷேகம் நடைபெறும்.
மேலும் ஐப்பசி மாதம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு பூச்சாட்டுதல் நிகழ்ச்சி மிக விமர்சையாக நடைபெறும்.

 அதன்படி இந்த ஆண்டு கடந்த வாரம் 24 .10 .23 செவ்வாய்க்கிழமை அன்று பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு கட்டளைதாரர்கள் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் சிறப்பு அலங்காரங்கள் அபிஷேகங்கள் செய்து வருகின்றனர்.

அதன்படி பார்க்கவ குல சமூகத்தார்கள் சார்பில் அவர்களது சங்கக் கட்டிடத்தில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் செய்து தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட சமூகத்தார்கள் பெண்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதி வழியாக கேரளம் செண்டை மேளம் மற்றும் நாதஸ்வரம் மேளம் வாத்தியங்களுடன் ஊர்வலமாக வந்து ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் செய்து வழிபட்டனர்.

தொடர்ந்து சுவாமி திருவீதி உலா மற்றும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

இதில் பார்க்கவ குல சமூகத்தார்கள் மற்றும் சங்க நிர்வாகிகள், இயக்குனர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தலைப்புச்செய்திகள்